பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லி., மண்ணெண்ணெய் பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லி., மண்ணெண்ணெய் பறிமுதல்

ராமநாதபுரத்திலுள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லி., மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரத்திலுள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லி., மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடியில் பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த சில மாதங்களாகவே ரேஷன் மண்ணெண்ணெயை கள்ளச் சந்தையில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிச்செல்வி உத்தரவின் பேரில் பரமக்குடி வட்ட வழங்கல் அதிகாரி கீதா இன்று பரமக்குடி நகர் முழுவதும் ஆய்வு செய்தார்.

அப்போது பரமக்குடி உழவர் சந்தையில் உள்ள ஒரு பெட்டி கடையில் ஆய்வு செய்தபோது கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெயை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மண்ணெண்ணெயை பதுக்கி வைத்திருந்த ரம்ஜான் என்ற பெண்ணிடம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story