பரமத்தி வேலுர் காவிரி பாலம் அருகே வாகன சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பரமத்தி வேலுர் காவிரி பாலம் அருகே வாகன சோதனையில் ரூ.4 லட்சம்  பறிமுதல்

பணம் பறிமுதல் 

பரமத்தி வேலுர் காவிரி பாலம் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் செல்வதற்காக வந்த முட்டை லாரியை ஒன்றை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் முட்டை லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி அருகே உள்ள அரூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 850- ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story