ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல்; இருவர் கைது

ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவர் கைது செய்தனர்.
ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் இருவர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை போலீசார் படத்தானூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குட்டி என்கிற கோவிந்தராஜ் வயது 45. திருப்பத்தூர் அருகே உள்ள அரங்கநாத வலசை சேர்ந்தவர் தேவேந்திரன் வயது 60. இவர்கள் இருவரும் படத்தானூர் பகுதியில் வேட்டையாடுவதற்காக வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்து 200 கிராம் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரையும் கைது செய்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story