பள்ளிபாளையம் அருகே விதிகளை மீறி செயல்பட்ட ஆம்புலன்ஸ் பறிமுதல்

பள்ளிபாளையம் அருகே விதிகளை மீறி செயல்பட்ட ஆம்புலன்ஸ் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ்

பள்ளிபாளையம் அருகே விதிகளை மீறி இயங்கிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கணபதிபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது குமாரபாளையத்தில் இருந்து வந்த தனியார் காரை நிறுத்தி சோதனை செய்தனர் . அந்த கார் ஆம்புலன்ஸாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது .

இதனை அடுத்து காரை பறிமுதல் செய்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story