உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற தேங்காய் பறிமுதல்

உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற தேங்காய் பறிமுதல்

தேங்காய் பறிமுதல்

சிவகங்கை அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 7 டன் தேங்காயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை அருகே இடையமேலூர் பகுதியில் சிவகங்கை-மேலூர் சாலையில் வட்டாட்சியர் மகாதேவன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உச்சிப்புளியில் இருந்து நத்தத்துக்கு தேங்காய் நெற்றுகளை ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால், லாரியில் இருந்து 7 டன் தேங்காய் நெற்றுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் சிவகங்கை தாலுகா போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story