சிவகாசியில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிவகாசியில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்கள் 
சிவகாசியில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்த்குமார் தலைமையில் காவல்துறையினர் சாத்துார் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்கையில் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டது.

ஏசுமார் ரூ 30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களையும் கடத்தி வரப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் கார் உரிமையாளர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முனியசாமி (57) மற்றும் பெரியகுளம் தென் கரையைச் சேர்ந்த டிரைவர் சையது சுல்தானை (51) இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story