அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்!

அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்!

லாரி பறிமுதல்

அன்னவாசல் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அன்னவாசல் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி ஆற்றுமணல் மற்றும் கிராவல் மணல் அள்ளப்படுவதாக இலுப்பூர் வட்டாட்சியர் சூரியபிரபுவுக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து வட்டாட்சியர்தலைமையிலான வருவாய்த்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, கீழக்குறிச்சி அருகே உள்ள புதுகுளத்தில் அனுமதியன்றி கிராவல் மண் அள்ளப்பட்டு தனியாக நின்று கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story