சிவகாசி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

சிவகாசி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
சிவகாசியில் தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றிய ரூ 15 லட்சம்....
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் 3 பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சிவகாசி சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில், அவ்வழியே வந்த சிவகாசி ஞானகிரி ரோட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.4.46 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.சிவகாசி அருகே மாரனேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிங்கம்பட்டியில் நடந்த சோதனையில் சிவகாசியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.8.70 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் T.மானகசேரி விலக்கு அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story