போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் - மூவர் கைது

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் - மூவர் கைது

மூவர் கைது 

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல்,மூவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ,ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் இன்று சென்னை மதுரவாயல் அருகே அடையாளம் பட்டு மேம்பாலம் கீழ் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் படி அங்கு சென்ற மதுரவாயல் 3 பேரை கைது செய்தனர். விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் பெத்தமைட்டமின் எனப்படும் 52 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகளும் எடை போட பயன்படுத்தப்படும் இரண்டு எடை மெஷின்களும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தர்மராஜ் வயது 21, பிரமோத் வயது 20 மற்றும் அஸ்வின்ராஜ் வயது 23 ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story