வாக்குப்பதிவு அலுவலருக்கு வலிப்பு - உதவிய வேட்பாளர்

வாக்குப்பதிவு அலுவலருக்கு வலிப்பு - உதவிய வேட்பாளர்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்


சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கும் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் , இளையான்குடி பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட சென்றிருந்தார். அப்பொழுது, இளையான்குடி ஹமீதியா மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில், வாக்குப்பதிவு அலுவலர் ஜோஸ்லி என்பவருக்கு , திடீரென வலிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கிருந்த அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், மயக்க நிலையில் இருந்த வாக்குப்பதிவு அலுவலர், ஜோஸ்லிக்கு ஆறுதல் கூறி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு அங்கு வாக்குப்பதிவு செய்ய வந்த வாக்காளர்களிடையே , பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story