மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.67 ஆயிரம் பறிமுதல்

மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.67 ஆயிரம் பறிமுதல்

வாகன சோதனை

உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.67 ஆயிரம் பறிமுதல்.
திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலை கூத்தூர் மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூரில் இருந்து திருவையாறு வழியாக விஷ்ணப் பேட்டை சென்று கொண்டிருந்த கனகராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். சோத னையில் உரிய ஆவணங்களின்றி ரூ.67ஆயிரத்தை கனகராஜ் எடுத்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு தாலுகா அலுவல் கத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாராணி, தாசில் தார் தர்மராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story