மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்தல் 

புதுக்கோட்டை மாவட்டம், ஆரணிப்பட்டி பகுதியில் மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உடையாளிப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆரணிபட்டி குளத்து வாரி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்தனர்.

லாரி டிரைவர் ஆரணிபட்டியை சேர்ந்த சேதுபதி (28) என்பவரை கைது செய்து 3 யூனிட் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமை யாளர் புதுப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் இலுப்பூர் தாசில்தார் சூரியபிரபு அன்ன வாசல் அருகே நேற்று சென்றபோது, அந்த வழியாக அதிக செங்கல் மற்றும் கூலியாட்களை ஏற்றிவந்த சரக்கு வேனை மறித்து பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.

Tags

Next Story