அனுமதியின்றி மணல் அள்ளியல் லாரி பறிமுதல்!

அனுமதியின்றி மணல் அள்ளியல் லாரி பறிமுதல்!

லாரி பறிமுதல்

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற மினி டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற மினி டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். விராலிமலை அருகே உள்ள கோரையாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார், விராலிமலை அருகே உள்ள துலுக்கம்பட்டி கோரையாறு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக மண ஏற்றிவந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது ஏற்றிவந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2 யூனிட் மணல் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநரான விராலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த மணிவேல் (36) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story