மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

தர்மபுரி மாவட்டம், எர்ரப்பட்டி முதல் நாகாவதி அணை செல்லும் சாலையில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்ட, புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி ஆர்.ஐ., அருணகிரி, பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உட்பட்ட எர்ரப்பட்டி முதல் நாகாவதி அணை செல்லும் சாலையில், நேற்று மாலை ரோந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்திய போது, ஓட்டுனர் உடனடியாக தப்பி ஓடினார் . இதனை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, டிராக்டரில் மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, ஆர்.ஐ., அருணகிரி டிராக்டரை பறிமுதல் செய்து, பெரும்பாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து பெரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story