கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்!

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்!

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

விருதாபட்டியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய இருவர் மீது வழக்கு.
விராலிமலை ஒன்றியம் விருதாபட்டியில் அனுமதியின்றி சிலர் கிராவல் மண் அள்ளி விற்பனை செய்வதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் விருதாபட்டி பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை யிட்டபோது, 3 யூனிட் கிராவல் மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி உரிமையாளரான நம்பம்பட்டி ஊராட்சி கோடாலிக்குடியை சேர்ந்த சந்திரசேகர், லாரி டிரைவர் திருமலை(22)ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story