மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் கைது - டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் கைது -  டிப்பர் லாரி பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட லாரி 

திருப்பத்தூர் அருகே பசிலிக்குட்டையில் மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை பகுதியில் ஏரியில் மண் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிராமிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் போது டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மண் கடத்தியது தெரியவந்தது. ஓட்டுநர் சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story