புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் தடை புகையிலையை பறிமுதல் செய்ததோடு கடைகளுக்கு சீல் வைத்தனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவாரத்தில் கடைகளில் பதுக்கிய 117 கிலோ தடை புகையிலையை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 47 கடைகளுக்கு சீல் வைத்ததோடு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.3.90 லட்சம் அபராதம் விதித்தனர்.கொடைக்கானல், பழநி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், நத்தம்,தொப்பம்பட்டி, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில், கலெக்டர் பூங்கொடி உத்தரவில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அந்த வகையில் டிச.18 முதல் டிச.22 வரை திண்டுக்கல்லில் 7 கடைகள்,பழநி 9,நத்தம் 4,ஆத்துார் 6,வத்தலக்குண்டு 6, வடமதுரை 3, தொப்பம்பட்டி7 என ஒருவாரத்தில் 47 கடைகளுக்கு சீல் வைத்து, அங்கிருந்து 117 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story