புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல் 

பொன்னமராவதி அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக பொன்னமராவதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரி போலீஸார் கடைகளில் செவ்வாயக்கிழமை சோதனைமேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஒரு மளிகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்கள் லெ.திருப்பதி(35), லெ.அடைக்கலசாமி(39) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story