புளியறையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் -ஒருவா் கைது
கைது
தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலையத்துக்குள்பட்ட லாலாகுடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
புளியறை காவல் உதவி ஆய்வாளா் தீபன்குமாா் தலைமையில் போலீஸாா் லாலாகுடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்பகுதியில் முத்துகுமாா்(32) என்பவா் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ௩௬ கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags
Next Story