புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

விராலிமலையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

விராலிமலை கடைவீதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பெட்டி கடைக்காரரே கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 536 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விராலிமலை சப் இன்ஸ்பெக்டர் போலீசார் உள்ளிட்ட விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விராலிமலையில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது அந்த பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 536 புகையில் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து பெட்டி கடை உரிமையாளர் விராலிமலை ஆசாரி நகர் பகுதியைச் சேர்ந்த சடையப்பன் என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 536 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story