புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

விராலிமலை அருகே குட்கா விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்/

விராலிமலை ஒன்றிய பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட எஸ் பியின் தனிப்பிரிவு போலீசார் நேற்று காலை மாத்தூர், ஆவூர், பேராம்பூர்,மலம்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடை, மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது மாத்தூரில் மூர்த்தி(37) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போல ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் அன்பு(55) என்ப வரின் பெட்டிக்கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story