கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்!

திருமயம் அருகே அத்துமீறி ஜல்லி, கிராவல் மண் ஏற்றிவந்த மூன்று லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருமயம் அருகே தொலையானூர்,வெங்களூர், ஆதனூர், கண்ண னிபட்டி பகுதிகளில் அரசு அனுமதி யின்றி ஜல்லி, கிராவல் மண் போன்ற வற்றை சிலர் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கண்ணனிப்பட்டி கண்மாய் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது குவா ரியில் இருந்து அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி ஏற்றிய 2 டாரஸ் லாரிகள், ஒரு டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் மாங்கொம்பு சண்முகநாதன் (51), மாவூர் அழகு(42), கே.பள்ளிவாசல் சவரிமுத்து (47) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story