திருப்பூரில் ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்

திருப்பூரில்  ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்

திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 1,00,000 கொண்டு சென்ற நபரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 1,00,000 கொண்டு சென்ற நபரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார்ஜிகிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உள்ளடக்கிய 114- திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு வட்டம் வெள்ளியங்காடு முத்தையன் கோவில் அருகில் திருப்பூர் மாநகராட்சி கண்காணிப்பாளர் சக்திவேல் என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது வினோத்குமார் என்பவரது நான்கு சக்கர வாகனத்தினை சோதனை செய்த போது வாகனத்தினவாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 1,00,000 கொண்டு சென்றது தெரிய வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் தேர்தல் கணக்கு (பொ)தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

Tags

Next Story