சிறுவர்கள் இயக்கிய வாகனங்கள் சிறை பிடிப்பு

சிறுவர்கள் இயக்கிய வாகனங்கள் சிறை பிடிப்பு

 பெற்றோருக்கு அறிவுரை

திண்டுக்கல்லில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்து போலீசார் பிடித்து வைத்து பெற்றோரை அழைத்து அபராதம் விதித்து அறிவுரை வழங்கினர்.

மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பெயரில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ,சிபின அறிவுரை படியும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் திலிப் குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் திண்டுக்கல் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதிக அளவில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 10க்கும் மேற்பட்ட இளம் சிறார்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது .மேலும் 18 வயது உட்பட்ட சிறுவர்களிடம் இனி எக்காரணம் கொண்டும் வாகனத்தை கொடுக்ககூடாது. மீறி கொண்டு வரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என பெற்றோர்களை போலீசார் எச்சரித்தனர் .

Tags

Next Story