மண் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்

மண் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்

காவல் நிலையம் 

பாலக்கோடு அருகே மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
பாலக்கோடு அடுத்த கம்மநாயக்கன்பட்டி ஏரியில் மண் கடத்தப்படுவதாக பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்டாட்சியர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கம்மநாயக்கன்பட்டி ஏரியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் நொரம்பு மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடி தலைமறை வாகினர். இதையடுத்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story