இளம் பெண் நீதிபதியாக தேர்வு

இளம் பெண் நீதிபதியாக தேர்வு

இளம் பெண் நீதிபதியாக தேர்வு

சங்கராபுரத்தை சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். சங்கராபுரம் பகுதியில் முதல் நீதிபதியாக இவர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரத்தை சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் மறைமுக நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது. இதில் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தைச் சேர்ந்த திருப்பதி மகள் கண்மணி,24; தேர்ச்சி பெற்று நீதிபதியாக தேர்வாகி உள்ளார். பி.ஏ., பி.எல்., பட்டதாரியான இவருக்கு வழக்கறிஞர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சங்கராபுரம் பகுதியில் முதல் நீதிபதியாக இவர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story