குமாரபாளையத்தில் மாவட்ட செங்குந்தர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையத்தில் மாவட்ட செங்குந்தர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

தேர்தலில் கலந்து கொண்டவர்கள் 

குமாரபாளையத்தில் மாவட்ட செங்குந்தர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்தல் குமாரபாளையத்தில் நடந்தது. சிறப்பு பார்வையாளராக தலைமை சங்க பொருளார்.காந்தி, பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் நந்தகுமார் மற்றும் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடந்தது.

தேர்தலில் ஏகமனதாக மாவட்ட தலைவராக மதிவாணன், செயலாளராக சீனிவாசன், பொருளாளராக கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் குமாரபாளையம் தங்கராஜ் பள்ளிபாளையம் விக்னேஷ் உள்ளிட்ட 13 மாநில செயற்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை தேர்தல் பார்வையாளர் மற்றும் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பிரபு மற்றும் கிளைச்சங்க நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Tags

Next Story