எம்எல்ஏ தலைமையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான புதிய இடம் தேர்வு
எம்எல்ஏ தலைமையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது.
எம்எல்ஏ தலைமையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-155, இராமாபுரம், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு இன்று பெருநகர சென்னை மாநகராட்சி நிதி மூலம் 4 புதிய வகுப்பறைகள் மற்றும் எல் & டி தனியார் நிறுவனம் நிதி மூலம் 6 புதிய வகுப்பறைகள் கட்டித் தருவதற்கு இடத்தை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி மற்றும் எல் & டி குழுமத்தினர் தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் தலைமை பொதுக் குழு உறுப்பினர் இராமாபுரம் வ.செல்வகுமார், எம்.சி., பகுதி பொருளாளர் K.ராஜி, எம்.சி., வட்ட கழக செயலாளர் ஆ.ராதாசெல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story