எம்எல்ஏ தலைமையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான புதிய இடம் தேர்வு

எம்எல்ஏ தலைமையில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-155, இராமாபுரம், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு இன்று பெருநகர சென்னை மாநகராட்சி நிதி மூலம் 4 புதிய வகுப்பறைகள் மற்றும் எல் & டி தனியார் நிறுவனம் நிதி மூலம் 6 புதிய வகுப்பறைகள் கட்டித் தருவதற்கு இடத்தை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி மற்றும் எல் & டி குழுமத்தினர் தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் தலைமை பொதுக் குழு உறுப்பினர் இராமாபுரம் வ.செல்வகுமார், எம்.சி., பகுதி பொருளாளர் K.ராஜி, எம்.சி., வட்ட கழக செயலாளர் ஆ.ராதாசெல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story