விவசாய சங்கத்திற்கு ஒன்றிய பேரவை நிர்வாகிகள் தேர்வு

விவசாய சங்கத்திற்கு ஒன்றிய பேரவை நிர்வாகிகள் தேர்வு

கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்திற்கு ஒன்றிய பேரவை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்திற்கு ஒன்றிய பேரவை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணைத்தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் கணேசன், சிபிஐஎம் மாவட்ட செயற்குழு அருளரசன் ஆகியோர் பங்கேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைவராக சுதாகரன், செயலாளராக ராஜா, பொருளாளராக குணசேகரன், துணை செயலாளர்களாக பாலமுருகன், ஜெயபால் மற்றும் துணைத்தலைவராக சிவசங்கரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் ஒன்றிய துணைச்.செயலாளர் ஜெயபால், ஒன்றிய பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story