முருகா முருகா என்று பாடல் பாடிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்!

முருகா முருகா என்று பாடல் பாடிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்!

வேட்பு மனு தாக்கல்

மக்களுக்கு கலை உணர்வு பிடிக்கும் என்பதால் நடனமாடிக் கொண்டு மனு தாக்கல் செய்தேன்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் நடனமாடிக் கொண்டும் முருகா,முருகா என்று பாடிக்கொண்டு சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடனமாடிக் கொண்டே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதல் ஆர்வம் இருந்த நிலையில் எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளேன் என்றவர் அது சார்ந்த தொழில்கள் மற்றும் பொது மக்களுக்கு சேவை செய்வதே என்னுடைய இலக்கு என்றார்.விவசாயம் இல்லையென்றால் நாடே கிடையாது என்றவர் சின்ன சிரபுஞ்சியில் இருந்து நீரை நம்முடைய மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.பிறந்த பெண் குழந்தையிலிருந்து மூதாட்டி வரையு 5 பவுன் தங்க நகை கொடுக்கப்படும் என்றவர் நிலம் இல்லாதவர்களுக்கு அரை ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் எனவும் நிலம் உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறேன் என்றார்.மேலும் பவுன் பத்தாயிரம் இருந்தாலும்,லட்ச ரூபாய்க்கு விற்றாலும் பூமியிலிருந்து வெட்டி மக்களுக்கு கொடுப்பேன் எனவும் இங்கிலாந்துகாரன் ரெண்டு டன் தங்கத்தை இந்தியாவில் இருந்து எடுத்துட்டு போயிருக்கிறான் என தெரிவித்தார்.ஆண்கள் உழைத்து வாழ வேண்டும் எனவும் இளைஞர்கள் பைக்குகளை வேகமாக ஓட்டி விபத்துக்கு உள்ளாகி வருவதால் அவர்களுக்கு எதுவும் கிடையாது என்றார்.மக்களுக்கு கலை உணர்வு பிடிக்கும் என்பதால் நடனமாடிக் கொண்டு மனு தாக்கல் செய்ய வந்ததாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story