மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுய பராமரிப்பு உபகரணங்கள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுய பராமரிப்பு உபகரணங்கள்

காணையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுய பராமரிப்பு உபகரணங்கள் முகாம் நடைபெற்றது.

காணையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுய பராமரிப்பு உபகரணங்கள் முகாம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் காணை ஒன்றியத்தில் இல்லம் சார்ந்த பயிற்சியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுய பராமரிப்பு உபகரணங்களான டயாபர், நாப்கின் போன்றவை வழங்கும் முகாம் நடைபெற்றது.

இதற்கு காணை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார் வையாளர் ஆரோக்கிய அனிதா கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுய பராமரிப்பு உபகரணங்களை வழங்கினார்.

இம்முகாமில் சிறப்பு பயிற்றுனர்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா, ஏசுமரி, இயன்முறை மருத்துவர் சவுந்தரராஜன் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story