செல்லாண்டி அம்மன் கோவில் திருத்தேர்விழா - வடம் பிடித்து துவக்கி வைத்த செல்வகணபதி

எடப்பாடி அடுத்த கச்சுபள்ளி செல்லாண்டி அம்மன் திருத்தேரோட்டம் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி வடம்பிடித்து துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கச்சுபள்ளியில் செல்லாண்டியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தேரோட்டத்தை தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக சேலம் மேற்குமாவட்ட செயலாளருமான T.M.செல்வகணபதி கவந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தார். தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கரகோசம் எழுப்பி வடம்பிடித்து தேரை இழுத்துசென்றனர். தேரோட்ட துவக்க நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலர் சங்கர், கொங்கணாபுரம் திமுக ஒன்றியசெயலாளர் பரமசிவம் கச்சுபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் கவுண்டர் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story