வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவிலில் ரூ 20 லட்சத்து 57 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பழனி, கீரனூர், வேலம்பட்டி, பாப்பம்பட்டி, பூலாம்பட்டி, சென்னிமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து 47 விவசாயிகள் 490 மூட்டைகளில் 25 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளகோவில், முத்தூர், சிவகிரி, நஞ்சை ஊத்துக்குளி ஆகிய பகுதியைச் சேர்ந்த 11 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். தேங்காய் பருப்பு கிலோ 69.65 முதல் ரூ.93.16 வரை விற்பனையானது. சராசரி விலை 88.80 ஆகும். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.20 லட்சத்து 57 ஆயிரம் ஆகும். இந்தத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Tags

Next Story