கொடி கட்டிபறக்கும் கஞ்சா விற்பனை

கொடி கட்டிபறக்கும் கஞ்சா விற்பனை

 திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதால், இளைஞர்கள் பலரும் அதற்கு அடிமையாவதால் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதால், இளைஞர்கள் பலரும் அதற்கு அடிமையாவதால் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கொடிகட்டி பறக்கிறது.இதனால் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 1 டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன.திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் காவலர்கள் நல்லாம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சமத்துவபுரம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த மகேஷ்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story