திருவண்ணாமலை அருகே கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

திருவண்ணாமலை அருகே கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

கோப்பு படம் 

திருவண்ணாமலை அடுத்த நெசல் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த நெசல் கிராமத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கஞ்சா விற்பனை செய்த சக்திவேல் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story