கஞ்சா விற்பனை: இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய சரகம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த கேசவ் குமார் என்பவரது வீட்டில் 1400 கிராம்; கஞ்சாபறிமுதல் செய்யய்பட்டு மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும் மானாமதுரை உட்கோட்டம், திருப்புவனம் ஆபுசு நகர் மடப்புரம் விலக்கைச் சேர்ந்த கௌதமன் (23) என்பவரிடம் கடந்த 8.11.23ம் தேதி பூவந்தி, மடப்புரம் கண்மாய்க்கரை அருகே 8 கிலோ கஞ்சாவானது பறிமுதல் செய்யய்பட்டு பூவந்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

மேற்படி வழக்குகளில் தலைமறைவாக இருந்த நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தனிப்படையைச் சேர்ந்த காவல்துறையினர் இன்று கைது செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story