குட்கா விற்பனை - பெட்டிக்கடைக்காரர் கைது

குட்கா விற்பனை - பெட்டிக்கடைக்காரர் கைது

அப்துல் ஜலீல்

குமரக்குப்பத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற பெட்டிக்கடைக்காரரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரக்குப்பத்திலுள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட பன்மசாலா குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டதில் அப்துல் ஜலீல் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை தெரியவந்ததை அடுத்து அவரிடமிருந்து 15 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அப்துல் ஜலீலை கைது செய்தனர்.

Tags

Next Story