தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை பொறுப்பேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை பொறுப்பேற்பு

நாமக்கல் காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை பொறுப்பேற்றதை முன்னிட்டு நாமக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதை வரவேற்று, நாமக்கல்லில் காங்கிரஸார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவருமான செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமையில் காங்கிரஸ் பிரமுகர்கள், நாமக்கல்- பஸ்நிலையம் எதிரில் உள்ள நேருசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், முன்னாள் மாணவர் காங்கிரஸ் செயலாளர் டாக்டர் பாலாஜி, நகர காங்கிரஸ் தலைவர் மோகன், மாநில ஓ.பி.சி. துணைத் தலைவா் டாக்டா் பி.வி.செந்தில், மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் பொன்முடி, முன்னால் எஸ்.சி பிரிவு தலைவர் பொன்னையன், எருமப்பட்டி வட்டார தலைவர் தங்கராஜ், புதுச்சத்திரம் வட்டார தலைவர் இளங்கோ, சேந்தமங்கலம் அன்பழகன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மகேஸ்வரி, ராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கன்னியம்மாள் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story