செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ரங்கசாமிபுரம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

ரங்கசாமிபுரத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம் கிராமம், புன்னம் சத்திரம் அருகே உள்ள ரங்கசாமிபுரத்தில் புனரமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதி காலையில் மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டு, விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை,பிம்மசுத்தி, ரக்க்ஷாபந்தனம், நாடீ சந்தானம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி, மஹா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, வேள்வியாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கோ பூஜை நடைபெற்றது. பிறகு மூலவருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் அன்னதானமும் வழங்கினர்.

Tags

Next Story