செம்மண் கடத்தியவர் கைது

செம்மண் கடத்தியவர் கைது

கைது

பேரணாம்பட்டு அருகே செம்மண் கடத்தி வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு போலீசார் வீ.கோட்டா ரோடு - அரவட்லா ரோடு சந்திப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி ஜெ.ஜெ. நகர் சுடுகாடு பின்புற பகுதியில் இருந்து செம்மண் ஏற்றி கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் பேரணாம்பட்டு அருகே பெரியதாமல் செருவு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story