செஞ்சி : ஒன்றியக்குழு தலைவருக்கு புதிய கார் வழங்கிய அமைச்சர்

செஞ்சி : ஒன்றியக்குழு தலைவருக்கு புதிய கார் வழங்கிய அமைச்சர்
 புதிய காரின்  சாவியை  வழங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவருக்கு அரசு சார்பில் புதிய கார் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனை அவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய வாகனத்தின் சாவியை ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், ஒன்றிய கவுன்சிலர் கேமல் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story