2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

நெல் மூட்டைகள்

கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் எடை கொண்ட சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 52 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

Tags

Next Story