சேலம் தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

அதிகாரி ஆய்வு
சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அம்மாப்பேட்டை கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு வைப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு மையத்தை நேற்று தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி. பாட்டீல், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து தேர்தல் பொதுபார்வையாளர் ஜி.பி. பாட்டீல் கூறியதாவது:- சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களுக்கு தேர்தல் நாளன்று அவைகள் பாதுகாப்பான,
முறையில் அனுப்பி வைக்கப்படும். 6 சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரம் உள்ள அறைக்கு சீல் வைத்து அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும் அந்தந்த அறையின் வெளிப்புறத்திலும், எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் உள்ளேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சின்னம் பொருத்தும் பணியின் போது முகவர்கள், வேட்பாளர்கள் அல்லது அவரை சார்ந்தவர்கள் முன்னிலையில் நடைபெறும்.
அதற்கான போதிய இடவசதி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் அருகில் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் தேவையான பொருட்கள் அனைத்தும் வைப்பதற்கான அறையும் உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
