தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 
குமாரபாளையம் வடக்கு நகர திமுக மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் .மதுரா செந்தில் அறிவுறுத்தல்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், குமாரபாளையம் வடக்கு நகர திமுக சார்பில், நகர தி.மு.க செயலாளர், நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் ஏற்பாட்டில், அரிசி, பருப்பு, சர்க்கரை, ரவை, உப்பு உள்ளிட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள், மற்றும் குமாரபாளையம் நகராட்சி சார்பில் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆணையாளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், ராஜ் நகர பொறுப்புக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் வழியனுப்பி வைத்தனர்.

Tags

Next Story