தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அனுப்பி வைத்தார். தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்கள், குடிநீ பாட்டில்கள், பகுப்பு வகைகள், சர்க்கரை, உப்பு, டீ தூள் பாக்கெட்கள், அரிசி, 2250 லிட்டர் எண்ணெய், கோதுமை மாவு, பிரட் பாக்கெட்கள், சோப்புகள், போர்வைகள் மற்றும் துணி வகைகள் , நூடுல்ஸ் பாக்கெட்கள், ரவை, தீப்பெட்டிகள், நாப்கிர்கள் என ரூ.93,81,399 மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனம் தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story