தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தென் மாவட்டங்களுக்கு ரூ.65.84 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு - இராஜேஸ்குமார் எம.பி தகவல்.

தென் மாவட்டங்களுக்கு ரூ.65.84 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம.பி தகவல்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 8 குடிநீர் வாகனங்களில் 1.53 லட்சம் லிட்டர் குடிநீர் வாகனங்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார் . நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில் இராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அரங்கசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story