தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டத்துக்கு, அரியலூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டத்துக்கு, அரியலூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கபட்டு உள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளதால் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க ஆட்சியரகத்திலிருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 2500 கிலோ அரிசி, 500 கிலோ துவரம் பருப்பு, 500 கிலோ உப்பு, 500 கிலோ சர்க்கரை, 250 கிலோ கோதுமை மாவு மற்றும் மிளகாள்தூள், சாம்பார்பொடி, மஞ்சள்தூள், ரசப்பொடி, டீத்தூள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட 5 லட்சத்தி 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கபட்டது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story