பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி

பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி நடைபெற்றது


தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாட புத்தகம் அனுப்பும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து வகையான பள்ளிகளும் ஜூன் 6-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட "நோடல்" மையங்களில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான பாட புத்தகங்களை அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story