பாஜ., சார்பாக இரண்டாவது கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

விருதுநகர் பாஜ., சார்பாக இரண்டாவது கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தென் மாவட்டங்களான தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி போன்ற மாவட்டங்களில் கலந்த 17ஆம் தேதி முதல் தொடர்பு பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும்போது மக்களுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் அத்யாவசிய பொருட்களை அனுப்பி விடும் நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் முதற்கட்டமாக 10 லட்சம் மதிப்பிலான விவாத பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் 300 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் இரண்டாம் கட்டமாக தூத்துக்குடிக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் புஷ்ப குமார் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பட்ட முத்து ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் நிவாரண பொருட்கள் வழங்கிய பென்டகன் குழுமம் மற்றும் சேலம் கல்கி கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story