சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் அனுப்பி வைத்தார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனை கூட சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடந்தது.இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆனது கணினி குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story